நக்ஸல்கள் வேரோடு அழிக்கப்படுவார்கள் - அமைச்சர் ராஜ்நாத் சிங்

2 ஆயிரத்து 23ஆம் ஆண்டுக்குள் நக்ஸல் தீவிரவாதிகள் வேரோடு அழிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.

Update: 2019-04-24 05:09 GMT
2 ஆயிரத்து 23ஆம் ஆண்டுக்குள் நக்ஸல் தீவிரவாதிகள் வேரோடு அழிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் பேசிய அவர், நாட்டில் 126 மாவட்டங்கள்  நக்ஸல்களின் ஆதிக்கத்தில் இருப்பதாகவும், தற்போது ஏழு எட்டு மாவட்டங்களில் மட்டும், நக்ஸல்கள் ஒடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். நாட்டின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதிகள் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்