பேரனுக்காக சொந்த தொகுதியை விட்டுக்கொடுத்த தேவகவுடா

நாடாளுமன்ற தேர்தலில் ஹாசன் தொகுதியை, முன்னாள் பிரதமர் தேவகவுடா தமது பேரனுக்கு விட்டுக் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

Update: 2019-03-14 00:25 GMT
கர்நாடகாவில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.  காங்கிரஸ் கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்ளும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் தேவகவுடா குடும்பத்தில் இருந்து மேலும் இரண்டு வாரிசுகள் களம் காண்கின்றனர். ஹாசன் மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய தேவகவுடா, இதுவரை தனக்கு அளித்து வந்த ஆதரவை இனி தனது பேரனான பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு அளிக்க வேண்டும் என ஹசன் தொகுதி மக்களிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். தேவகவுடா கோட்டையான, ஹாசன் தொகுதியை தமது வாரிசுக்கு, விட்டு கொடுத்து வேறு இடத்தில் போட்டியிட தேவகவுடா முடிவு செய்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்