இந்திய விசைப் படகுகள் அத்துமீறுவதாக புகார் : ரூ.1 லட்சம் இழப்பு என இலங்கை மீனவர்கள் புகார்
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய விசைப் படகுகள் அத்துமீறி நுழைவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தில் புகார் அளித்துள்ள பேசாலை பகுதி மீனவர்கள், 500-க்கும் மேற்பட்ட இந்திய விசைப் படகுகள், இலங்கை கடல் பரப்பில் மீன் பிடித்ததாகவும், இதனால், தங்களின் வலைகள் அறுபட்டதோடு, மீன்கள் இன்றி ஒரு லட்சம் ரூபாய் இழப்புடன் திரும்பியதாக புகார் கூறியுள்ளனர். இலங்கை அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு, இந்திய விசைப்படகுகள் நுழைவை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.