கேரள அரசுக்கு எதிராக போராட்டம் : பா.ஜ.க.வினர் மீது போலீஸ் தடியடி

கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின் கரையில் பா.ஜ.க.வை சேர்ந்த சுமார் 50 பேர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-02 13:58 GMT
கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின் கரையில் பா.ஜ.க.வை சேர்ந்த சுமார் 50 பேர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டயருக்கு தீயிட்டு சாலையில் போட்டனர். இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் 10 பேர் காயமடைந்து உள்ளதாக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்