சோனியா மருமகன் ராபர்ட் வதேரா அலுவலகத்தில் சோதனை - மூட்டை மூட்டையாக சிக்கிய ஆவணங்கள்

சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-08 01:34 GMT
சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  ராஜஸ்தான் மாநிலம் பீகானிரில் நடந்த நில விற்பனையில், சட்ட விரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, ராபர்ட் வதேரா மீது அமலாக்கத் துறை வழக்குபதிவு செய்துள்ளது. இது குறித்து விசாரிக்க, 3 முறை நோட்டீஸ் அனுப்பியும் ராபர்ட் வதேரா, ஆஜராகவில்லை. இந்நிலையில், டெல்லி சுக்தேவ் விகார் பகுதியில் உள்ள ராபர்ட் வதேரா அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் நேற்று காலை தொடங்கி நள்ளிரவு வரை சோதனை நடத்தினர். அவரது, நெருங்கிய நண்பர்கள் 3 பேரின் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. அங்கிருந்து, மூட்டை மூட்டையாக ஆவணங்களை, அமலாக்கத் துறையினர் எடுத்துச் சென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்