வரவேற்பு பேனரை அகற்றிய கிரண்பேடி...

தன்னை வரவேற்று அமைக்கப்பட்டிருந்த பேனரை புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அகற்றினார்.

Update: 2018-12-08 00:34 GMT
தன்னை வரவேற்று அமைக்கப்பட்டிருந்த பேனரை புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அகற்றினார். புதுச்சேரி சமூகநலத் துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ள  சென்றபோது, நுழைவு வாசலில், அவரை வரவேற்று பேனர் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அந்த பேனரை அகற்றிய கிரண்பேடி, அதுபோன்று வைக்கக் கூடாது என எச்சரித்ததோடு, பேனருக்கான 500 ரூபாயை வழங்கினார். பின்னர், ஆலோசனை கூட்டத்தின்போது, அதிகாரிகள்  சால்வை அணிவித்தபோது, தேவையின்றி செலவு செய்ய கூடாது என அறிவுறுத்தியதோடு, சால்வைகளுக்கான தொகை 750 ரூபாயை அதிகாரிகளிடம் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, அந்த சால்வையை, அலுவலகத்தில் இருந்த சித்தர் படத்துக்கு அணிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்