அனைவரும் வளம்பெற வேண்டும் என்பதே லட்சியம் - பிரதமர் நரேந்திரமோடி

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் வளம் பெற வேண்டும் என்பதே பாஜகவின் லட்சியம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-28 14:03 GMT
ராஜஸ்தான் மாநிலம் நக்வுர் என்ற இடத்தில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய அவர், 2022 க்குள், அனைவருக்கும் வீடு உறுதி என்றார். 4 தலைமுறைகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியால் நாடு வளம் பெறவில்லை என கூறிய பிரதமர் மோடி, மக்களின் கனவை நாங்கள் நனவாக்குவோம் என்றார். பாஜகவை எதிர்க்க வழி தெரியாதவர்கள், ஏழைகளையும், விவசாயிகளையும் வைத்து அரசியல் செய்வதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்