கஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் பிரதமர்

கஜா புயல் மீட்பு நடவடிக்கையில் தமிழக அரசுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்

Update: 2018-11-16 20:32 GMT
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், கஜா புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்ததாக பிரதமர் தனது  சமூக வலைதள பதிவில், தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தனருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்வதாகவும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நிவாரண மீட்பு பணிகளில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்