முழு அரசு மரியாதையுடன் அனந்தகுமார் உடல் தகனம்

பெங்களுருவில் காலமான மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.

Update: 2018-11-14 05:23 GMT
மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்த அனந்தகுமார் உடல் பின்னர், தேசிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். முடிவில், முழு அரசு மரியாதையுடன் அனந்தகுமாரின் உடல் சாம்ராஜ்பேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்