சபரிமலை விவகாரம் : "கேரள முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும்" - எடியூரப்பா

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை கேரள முதலமைச்சர் உடனடியாக நாட வேண்டும் என கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2018-11-08 07:39 GMT
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை கேரள முதலமைச்சர் உடனடியாக நாட வேண்டும் என கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார். அனைத்து வயது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து 90 சதவீத மகளிர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாஜக எதிர்க்கவில்லை என்ற போதும், பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் எடியூரப்பா கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்