சபரிமலையில் தணிந்த பதட்டம்...

சபரிமலையில் கடந்த சில நாட்களாக காணப்பட்ட பதட்டமான சூழல் தற்போது சற்று தணிந்துள்ளது.

Update: 2018-10-21 06:13 GMT
சபரிமலையில் கடந்த சில நாட்களாக காணப்பட்ட பதட்டமான சூழல் தற்போது சற்று தணிந்துள்ளது. சபரிமலையில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் செல்வதற்கான தடையை நீக்கிய உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து, சபரிமலையில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. சபரிமலை சென்ற பெண்கள் தடுத்துநிறுத்தப்பட்டதால், அங்கு பதட்டமாக சூழல் நிலவி வந்தது. இந்நிலையில், சபரிமலையில் இன்று பதட்டம் சற்று குறைந்து, இயல்பு நிலை திரும்பியுள்ளது. அதேநேரம், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பம்பையில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவு இன்னும் தொடர்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்