அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான கடிதங்கள் வெளியானது எப்படி? - உயர் நீதிமன்றம் கேள்வி

புதுச்சேரி அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான ரகசிய கடிதங்கள் வெளியானது குறித்து பொது தகவல் அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-10-08 12:57 GMT
* புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியின் தனி செயலாளர் தேவநீதி தாஸ், ஓய்வு பெற்ற நிலையில், சிறப்பு பணி என்ற அடிப்படையில் மீ்ண்டும் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து புதுவையை சேர்ந்த சரவணன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், இவரின் நியமனம் தொடர்பாக முதல்வருக்கு தெரிவிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டி இருந்தார். 

* இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, புதுச்சேரி அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நடந்த ரகசிய கடித நகல்கள் மனுதாருக்கு எப்படி வழங்கப்பட்டது என்பது குறித்து சம்பந்தப்பட்ட தகவல் அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை வரும் 12 ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், தகவலறியும் உரிமைச் சட்டத்தில் இந்த தகவல்கள் பெறப்பட்டதா என்பது குறித்து மனுதாரர் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்