"சவுதியில் இயங்கும் சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம்" - இந்திய மாணவர்கள் சுஷ்மா சுவராஜ்-க்கு கோரிக்கை

சவுதியில் இயங்கும் சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம் என, இந்திய மாணவர்கள் சுஷ்மா சுவராஜ்-க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-10-08 08:52 GMT
சவுதியில் இயங்கும் சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம் என, இந்திய மாணவர்கள் சுஷ்மா சுவராஜ்-க்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அங்குள்ள ஜெட்டா நகரில் ஐ.ஐ.எஸ்.ஜெ., என்றழைக்கப்படும் இண்டர்நேஷனல் இந்தியன் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. தற்போது, கட்டடம் குறித்த பிரச்சினையில், சவுதி நீதிமன்றம் வரும் 9-ஆம் தேதிக்குள் மாணவர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.  

இந்த நிலையில், அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 'தயவு செய்து தங்களுக்கு உதவுங்கள்' என கோரிக்கை விடுத்து மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு, சமூக வலைதளத்தில் மனு அனுப்பிவைத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்