"வெடிகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை" - புதுச்சேரி வளர்ச்சி கட்சி தலைவர் பாஸ்கர்

திரைப்பட இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் சந்தேகத்திற்கு இடமான புதுச்சேரி வளர்ச்சி கட்சியை சேர்ந்த 2 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

Update: 2018-10-03 06:40 GMT
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் பாஸ்கர், செக்க சிவந்த வானம் படத்தில் புதுச்சேரி குறித்த சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க கோரியே மணிரத்னம் அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவித்தார். தங்களது கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் கொலைமிரட்டல் விடுக்கவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்