திருப்பதி பிரம்மோற்சவத்தின் 7ம் நாள் விழா - சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா

திருப்பதி கோவிலின் பிரம்மோற்சவ விழாவில் சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார்.

Update: 2018-09-19 11:33 GMT
சூரியனுக்கு ரத சாரதியாக வலம் வருவதன் மூலம், சூரிய பகவானின் பிரதி ரூபம், தானே என்பதை பெருமாள் கூறும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாளான இன்று காலை, கிருஷ்ணர் அலங்காரத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார்.
4 மாட வீதிகளில் நடைபெற்ற வீதி உலாவில் தமிழகம், ஆந்திர, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்