ஒடிசா : நூற்றுக்கணக்கான மயில்களுக்கு உணவளிக்கும் கன்னூசரன்..!

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் தினமும் நூற்றுக்கணக்கான மயில்களுக்கு உணவு அளித்து அவற்றை பராமரித்து வருகிறார் கன்னூசரன்.

Update: 2018-09-16 17:18 GMT
கன்னூசரன் என்பவர் தனது தாத்தாவின் விருப்பப்படி கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் மயில்களுக்கு உணவளிக்கும் சேவையை செய்து வருகிறார். ஆரம்பத்தில் 3 மயில்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அவற்றின் எண்ணிக்கை 117 ஆக பெருகிவிட்டது. தினமும் சிறு தானியங்கள், கோதுமை, சமைத்த அரிசி உணவு வகைகளை மயில்களுக்கு உணவாக அளிக்கிறார். மயில்கள் நிறைந்த இவரின் தோட்டமானது உள்ளூர் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்