எடியூரப்பா மீது வருமானவரி அலுவலகத்தில் காங்கிரஸ் புகார்

எடியூரப்பா ஆட்சியை தக்கவைத்துகொள்ள முறைகேட்டில் ஈடுபட முயன்றதாக கூறப்பட்ட புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என வருமானவரித்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் மனு அளித்துள்ளது.

Update: 2018-09-15 03:56 GMT
எடியூரப்பா ஆட்சியை தக்கவைத்துகொள்ள முறைகேட்டில் ஈடுபட முயன்றதாக கூறப்பட்ட புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என வருமானவரித்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. பாஜக மாநில தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஈஸ்வர் கந்த்ரே வலியுறுத்தியுள்ளார். இது குறி்த்து கருத்து தெரிவித்துள்ள பாஜக, கூட்டணியில் உள்ள பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் காங்கிரஸ் இது போன்ற சர்ச்சைகளை கிளப்பி வருவதாக தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்