டெல்லி தண்டவாளத்தில் பதட்டமே இல்லாமல் நின்றிருந்த நாய்
டெல்லியில் பதர்பூர் மெட்ரோ ரயில் நிலைய தண்டவாளத்தில் நாய் ஒன்று எந்த வித பதட்டமும் இல்லாமல் நின்று கொண்டிருந்தது.
டெல்லியில் பதர்பூர் மெட்ரோ ரயில் நிலைய தண்டவாளத்தில் நாய் ஒன்று எந்த வித பதட்டமும் இல்லாமல் நின்று கொண்டிருந்தது. இதனைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது ரயில் ஒன்று புறப்படத் தயாராக இருந்தது. இதனால், நாயை வெளியேற்ற பயணிகள் பலகட்ட முயற்சி மேற்கொண்டனர். ஆனால் நாயை வெளியேற்ற முடியவில்லை. பின்னர், நீண்ட போராட்டத்துக்கு பிறகு, தண்டவாளத்தில் இருந்த நாய் பத்திரமாக மீட்கப்பட்டது