கோவிலில் திருமணம்-நிவாரண முகாமில் வரவேற்பு

கேரள மாநிலம் ஆலங்காட்டை சேர்நத சிபின் என்பவருக்கு நேற்று திருமணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டு இருந்தது.

Update: 2018-08-26 09:27 GMT
கேரள மாநிலம் ஆலங்காட்டை சேர்நத சிபின் என்பவருக்கு நேற்று திருமணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சிபின் வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் அவர் தனது குடும்பத்துடன் நிவாரண முகாமில் தங்கி இருந்தார். 

இதனை அறிந்த அதே பகுதியை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர், பெண் வீட்டாரிடம் பேசி சிபினுக்கு அருகில் இருந்த கோவிலில் திருமணம் செய்து வைத்தார். இதனையடுத்து நிவாரண முகாமில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கிருந்த நூற்றுக்கணக்கானோர் மணமக்களை வாழ்த்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்