இந்தியாவுடன் இலங்கைக்கு நீண்டகால தொடர்பு: இலங்கை மீனவர்களிடம் இலங்கை அமைச்சர் அறிவுரை

இந்தியாவுடன் இலங்கைக்கு நீண்டகால தொடர்பு உள்ளதாகவும் மீனவர் பிரச்சினைக்காக பகைத்து கொள்ள முடியாது எனவும் இலங்கை மீன்வள அமைச்சர் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-22 10:41 GMT
யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்த அவரை, அங்குள்ள மீனவர்கள் சந்தித்து, இந்தியாவில் இருந்து மீன்பிடிக்க வரும் தமிழக மீனவர்கள் மற்றும் இழுவை படகு விவகாரம் தொடர்பாக மனு அளித்தனர். 

இதையடுத்து, அவர்களுக்கு பதிலளித்த விஜயமுனி, இந்த ஆண்டு மட்டும் இந்திய மீனவர்கள் 17 பேரை கைது செய்ததோடு, 87 படகுகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார். 

மேலும், இந்தியா சாதகமான நாடு எனவும் வரலாற்று ரீதியாக நீண்டகால தொடர்பு உள்ளதாகவும் விஜயமுனி தெரிவித்தார். புத்த மதம் மற்றும் இந்து மத வழிபாடுகளை தந்தது இந்தியா எனவும் மீனவர் பிரச்சினைக்காக இந்தியாவை பகைத்துக் கொள்ள முடியாது எனவும் அமைச்சர் விஜயமுனி கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்