ரிசர்வ் வங்கி இயக்குனர் குழுவில் ஆடிட்டர் குருமூர்த்தி நியமனம்

ரிசர்வ் வங்கி இயக்குனர் குழுவில் செயல் சாரா இயக்குனராக, ஆடிட்டர் குருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2018-08-09 08:59 GMT
ரிசர்வ் வங்கி இயக்குனர் குழுவில் செயல் சாரா இயக்குனராக, ஆடிட்டர் குருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். துக்ளக் இதழின் ஆசிரியராக உள்ள அவர், இந்தப் பதவியில் நான்கு ஆண்டுகள் நீடிப்பார். இதுபற்றி குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதற்காக, இதுவரை பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த எந்த நிறுவனத்தின் இயக்குனர் குழுவிலும் இடம்பெற்றதில்லை என குறிப்பிட்டுள்ளார். ஆனால், பொதுமக்களின் நலனுக்கு எனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற அழுத்தம் காரணமாக, இயக்குனர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்