அரசு பள்ளி மாணவர்களுக்கு அறுசுவை உணவு - முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் ஒப்பந்தம்

புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

Update: 2018-07-12 14:11 GMT
அரசு பள்ளி மாணவர்களுக்கு அறுசுவை உணவு

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ஏற்கனவே 16 லட்சம் மாணவர்களுக்கு அட்சய பாத்ரா அறக்கட்டளை உணவு தயாரித்து வழங்கி வருவதாகவும், தற்போது புதுச்சேரியில் உள்ள 50 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவித்தார். இதற்காக லாஸ்பேட்டையில் அமைந்துள்ள சமையற்கூடம், தானியங்கி சமையற்கூடமாக மாற்றப்பட்டு மாணவர்களுக்கு சாம்பார் சாதம், வெஜிடபுள் சாதம், சப்பாத்தி, பொங்கல் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்