ஜூலை 2ம் தேதி முதல் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்

மதுரை மாவட்டத்தில் ஜூலை 2ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை அரசு அலுவலகங்களில் பயன்படுத்த தடை விதித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-29 13:55 GMT
"அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை"



மதுரை மாவட்டத்தில் ஜூலை 2ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை அரசு அலுவலகங்களில் பயன்படுத்த தடை விதித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது படிப்படியாக அனைத்து இடங்களுக்கும் விரிவு படுத்தப்படும் என்றும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்