சத்தீஸ்கரில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்

Update: 2018-06-14 11:35 GMT
ஒருநாள் பயணமாக சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடியை அம்மாநில முதலமைச்சர் ராமன் சிங் வரவேற்றார். பின்பு ராய்பூர் சென்றடைந்த பிரதமர், அங்கு அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். இதனையடுத்து ராய்பூர் - ஜக்தல்பூர் விமான சேவையை துவக்கி வைக்கும் மோடி, பிலாய் நகரில் கட்டப்படவுள்ள புதிய ஐஐடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுகின்றார். இறுதியாக பிலாய் ஜெயந்தி மைதானத்தில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
முன்னதாக ராய்ப்பூரில் பள்ளிக் குழந்தைகளுடன் பிரதமர் மோடி உரையாடினார்.  
Tags:    

மேலும் செய்திகள்