பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம் - நடிகை சஞ்சனா சங்கியிடம் போலீசார் விசாரணை

நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை தொடர்பாக, நடிகை சஞ்சனா சங்கியிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

Update: 2020-07-01 08:43 GMT
எம்.எஸ். தோனி, தி அன்டோல்டு ஸ்டோரி படத்தில் நடித்தன் மூலம், பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங், கடந்த 14 ஆம் தேதி, மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து திரையுலகினரால் சுஷாந்த் சிங் அவமதிக்கப்பட்டதாகவும், பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிக்க விடாமல் சூழ்ச்சிகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து போலீசார் நடிகரின் குடும்பத்தினர், நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். அதன் படி, நேற்று, மும்பை போலீசார் நடிகை சஞ்சனா சங்கியிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். சுஷாந்த் சிங்கும், சஞ்சனா சங்கியும் இணைந்து குறும்படங்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்