பீட்டர் பாலின் மனைவி காவல் நிலையத்தில் புகார் - விவாகரத்து கொடுக்காமல் வனிதாவை திருமணம் செய்தது ஏன்?

நடிகை வனிதாவை திருமணம் செய்த பீட்டர் பால் மீது அவரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-06-28 04:22 GMT




சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் வனிதா. நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், பீட்டர் பால் என்பவரை நேற்று மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பீட்டர்பால் மீது அவரின் மனைவி எலிசபெத் ஹெலன், வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பீட்டருடன் திருமணமாகி தமக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் முறையாக விவாகரத்து அளிக்காமல் வனிதாவை திருமணம் செய்ததாக புகார் தெரிவித்தார். கருத்து வேறுபாடு காரணமாக, 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் வனிதாவை பீட்டர் திருமணம் செய்துள்ளார். முறையாக விவாகரத்து அளித்த பிறகே வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என பீட்டர் பால் ஏற்கனவே கூறியதாகவும், அவர் அதை பின்பற்றாமல் வனிதாவை திருமணம் செய்ததாகவும் எலிசபெத் ஹெலன் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். வனிதாவின் திருமண வாழ்க்கை மீண்டும் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது. 
Tags:    

மேலும் செய்திகள்