"தமிழ் பேசியதால் வாய்ப்பு கிடைக்கவில்லை" - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தாம் தமிழ் பேசியதாலும், மாநிறமாக இருந்ததாலும் தமக்கு முதலில் சினிமா வாய்ப்பு வரவில்லை என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-25 03:47 GMT
தாம் தமிழ் பேசியதாலும், மாநிறமாக இருந்ததாலும் தமக்கு முதலில் சினிமா வாய்ப்பு வரவில்லை என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கல்லூரி ஒன்றில் மாணவர்களிடம் உரையாற்றிய வீடியோவை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வெளியிட்டுள்ளார். அதில் சினிமாவில் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்ததாக குறிப்பிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், அதை தைரியமாக எதிர் கொண்டதாகத் தெரிவித்தார். சினிமாவில் முதலில் தமக்கு காமெடி நடிகர்களின் ஜோடியாக வர தான் வாய்ப்பு கிடைத்தது என்றும், ஆனால் அதனை தாம் ஏற்கவில்லை என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்