"காஷ்மீர் விவகாரத்தில் பொய் பிரசாரம்" - பாகிஸ்தான்,துருக்கி மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு

காஷ்மீர் விவகரத்தில் பாகிஸ்தான் மற்றும் துருக்கி நாடுகள் பொய் பிரசாரம் செய்து வருவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் பொய் பிரசாரம் - பாகிஸ்தான்,துருக்கி மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
x
ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் இந்தியா இதனை பதிவு செய்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினையில் எதையும் புரிந்துகொள்ளாமல் துருக்கி கருத்து தெரிவித்து வருவதாகவும் இந்தியா கூறியுள்ளது. மேலும் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்க இஸ்லாமிய கவுன்சில் அமைப்புக்கு உரிமை இல்லை என்றும் இந்தியா கூறியுள்ளது,. பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான சீக்கிய, இந்து, கிறிஸ்தவ  பெண்கள் கட்டாய திருமணம் மற்றும் மதமாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்தியா தெரிவித்தது.

Next Story

மேலும் செய்திகள்