சீன தூதரகம் முன்பு, இந்திய - அமெரிக்க சமூகத்தினர் போராட்டம்
அமெரிக்காவில் சிகாகோ நகரில் உள்ள சீன தூதரகம் முன்பு, இந்திய - அமெரிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவில் சிகாகோ நகரில் உள்ள சீன தூதரகம் முன்பு, இந்திய - அமெரிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திபெத், தைவான் பகுதிகள் சீனாவுக்கு சொந்தமானவை அல்ல என்ற பேனர்களையும், லடாக் பகுதியில் தாக்குதல் நடத்தி 20 இந்திய ராணுவ வீரர்களை கொலை செய்த சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான பேனர்களையும் அவர்கள் வைத்திருந்தனர். கையில் இந்திய தேசிய கொடியுடன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்
Next Story