கொரோனா வைரஸால் சர்வதேச பொருளாதாரம் பாதிப்பு - சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கருத்து
கொரோனா வைரஸ் காரணமாக, உலக பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக, உலக பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக, சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் உச்சிமாநாட்டில் பேசிய அவர், கொரோனா வைரஸ் பாதிப்பு விரைவில் சரிசெய்யப்படும் என்றாலும், நடப்பு ஆண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதை அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் குறைத்து வருவதால், பொருளாதார தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கிறிஸ்டலினா கூறினார்.
Next Story