15 ஆண்டை நிறைவு செய்த தோ​னி - யாழ்ப்பாணத்தில் தோனி ரசிகர்கள் ரத்த தானம்

இலங்கை யாழ்ப்பாணத்தில் தோனியின் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
15 ஆண்டை நிறைவு செய்த தோ​னி - யாழ்ப்பாணத்தில் தோனி ரசிகர்கள் ரத்த தானம்
x
இலங்கை யாழ்ப்பாணத்தில் தோனியின் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். இந்திய அணிக்காக மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்தது. இதனைக் கொண்டாடும் விதமாக, இலங்கையிலுள்ள தோனி ரசிகர் மன்றம் சார்பில், சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது. இதையடுத்து, கைதடி பகுதியில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்ற ரசிகர்கள், முதியவர்களுக்கு உணவு வழங்கி, மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். யாழ்ப்பாணத்திலுள்ள தோனி ரசிகர் மன்றத்தின் சார்பாக இதுபோன்ற நிகழ்வுகள் இரண்டாவது ஆண்டாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்