ஐ. நா வளாகத்தில் அமைதிக்கான காந்தி பூங்கா திறப்பு - விழாவில், பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பு

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி, நியூயார்க் நகரில் உள்ள ஐ. நா வளாகத்தில், அமைதிக்கான சூரிய ஒளி பூங்கா திறக்கப்பட்டது.
ஐ. நா வளாகத்தில் அமைதிக்கான காந்தி பூங்கா திறப்பு - விழாவில், பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பு
x
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150 - வது பிறந்த நாளையொட்டி, நியூயார்க் நகரில் உள்ள ஐ. நா வளாகத்தில், அமைதிக்கான சூரிய ஒளி பூங்கா திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திரமோடியுடன் ஐ. நா வின் தலைமை பொதுச்செயலாளர் ANTONIO GUTERRES , சிங்கப்பூர் பிரதமர் LEE HSIEN LOONG, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தென் கொரிய அதிபர் MOON - JAE - IN , நியூசிலாந்து பிரதமர் JACINDA ARDERN ஆகியோரும் கலந்து கொண்டனர். உலக அமைதியை வலியுறுத்தி, தலைவர்கள் ஒளிரும் பந்தில் கை வைத்து, தங்கள் 
ஒற்றுமையை பதிவு செய்தனர். மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளையொட்டி, சிறப்பு தபால் தலையும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்