சீனாவில் புயல் தாக்குதலால் கனமழை - 22 பேர் உயிரிழப்பு
சீனாவில் நேற்று லெகிமா புயல் தாக்கியது.
சீனாவில் நேற்று லெகிமா புயல் தாக்கியது. இதனால் பெய்த கன மழை காரணமாக ஷீஜியாங் உள்ளிட்ட பல மாகாணங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன.இதில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர். பலரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்நிவாரண பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story