தற்கொலைப்படை தாக்குதல் : உயிரிழப்பு 21 ஆக உயர்வு
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தாலீபன் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
யகாடூட் என்ற இடத்தில் அவாமி தேசிய கட்சியின் பொதுக்கூட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. ரத்த சகதியில் மிதந்த
65 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Next Story