ஸ்ரீ ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா - இஸ்லாமியர்களை கட்டியணைத்து வரவேற்ற நிர்வாகிகள்

x

திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டியில் உள்ள ஸ்ரீ ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளுமாறு இஸ்லாமியர்களுக்கு கோயில் நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர், சீர்வரிசை தட்டுகளுடன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இஸ்லாமியர்களை கட்டியணைத்து வரவேற்ற கோயில் நிர்வாகிகள், அவர்களுக்கு மரியாதை செலுத்தினர். கோயில் குடமுழுக்கு விழாவை இந்துக்களும், இஸ்லாமியர்களும் மத நல்லிணக்கத்துடன் இணைந்து நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்