பேக்கரி கடையில் திடீர் தீ விபத்து - ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில், பேக்கரி கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
x
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில், பேக்கரி கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. பேக்கரி கடையின் மேல் பகுதியில், இனிப்பு, காரம் தயாரிக்கும் தகர கொட்டகையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பணியாளர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தும், தீயானது மளமளவென பரவியுள்ளது. இதையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில், சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்த நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்