மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு - கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரிப்பு

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை சந்தித்து அமைச்சர் ரகுபதி நலம் விசாரித்தார்.
x
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா பல்நோக்கு சிறப்பு சிகிச்சை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பிபிஇ கிட் அணிந்து பல்நோக்கு சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்து ரகுபதி கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்