அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... குவியும் பரிசுப் பொருட்கள்!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்க தங்கக் காசுகள், பீரோக்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் குவிந்து வருகின்றன.
x
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்க தங்கக் காசுகள், பீரோக்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் குவிந்து வருகின்றன.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் இரு தரப்பினருக்கு இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்க நன்கொடைகள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீரோக்கள், வாஷிங் மெஷின்கள், நூறு தங்கக் காசுகள் ஆகியவற்றை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன்  ஆட்சியர் அனீஸ் சேகரிடம் வழங்கினார். மேலும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் நன்கொடையாக பல்வேறு தரப்பிலிருந்து வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்