வாகன தணிக்கையின் போது சிக்கிய 80 கிலோ தங்கம் - உரியவர்களிடம் ஒப்படைப்பு

சென்னையில் வாகன தணிக்கையின் போது போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 80 கிலோ தங்கம், உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதால், மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
x
தி நகர் அருகே காவல்துறையினர் ஊரடங்கின் காரணமாக தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பார்சல் டெலிவரி செய்யும் கார் ஒன்றில் 80 கிலோ தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார், பார்சல் இருந்த வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதை அடுத்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து நகை அந்நிறுவனத்திடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்