போலியாக ஸ்டிக்கர் ஒட்டி ஆடைகள் விற்பனை!

மதுரையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யப்பட்ட ஆடைகளை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
x
மதுரையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யப்பட்ட ஆடைகளை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை காளவாசல் பகுதியில் ஆடைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பிரபல ஆடை நிறுவன பிராண்ட்களின் ஆடைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகவும் அதனை அதிகளவிலான வாடிக்கையாளார்கள் வாங்கி செல்வதால் அந்த பிராண்ட்களுக்கென தனியாக உள்ள கடைகளில் விற்பனை குறைவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அந்த கடையில் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் சோதனை செய்ததில் அங்கு பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி ஆடைகள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த  அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்