பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை , தலைமை ஆசிரியர் கைது !

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
x
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அரசு உதவி பெறும் மேல் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 11ம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் சிறப்பு வகுப்பு எடுப்பதாகக் கிறிஸ்போபர் ஜெபக்குமார் கூறிய நிலையில், சில மாணவிகள் கலந்து கொண்டனர். அந்த மாணவிகளிடம் கிறிஸ்டோபர் நெருங்கிப் பழக முயற்சித்துள்ளார். மேலும் பள்ளியில் பயிலும் தாய் தந்தையை இழந்த  மாணவி ஒருவரது செல்போனுக்கு அடிக்கடி ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி வந்த நிலையில், பயந்து போன மாணவி தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் கடந்த மாதம் 29ஆம் தேதி போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவான கிறிஸ்டோபரைத் தேடி வந்தனர். அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கபட்ட நிலையில், நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் பகுதியில் பதுங்கி இருந்த  தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபகுமாரை போலீசார் சுற்றி வளைத்தனர். தலைமை ஆசிரியருக்கு திருமணம் ஆகி மனைவியும், 3  மகள்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்