சேலம் விபத்து : "நாடாளுமன்ற நிதியில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்" - சேலம் எம்.பி. பார்த்திபன்

சேலத்தில் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் பத்மநாபன் குடும்பத்தை நேரில் சந்தித்து சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆறுதல் கூறினார்.
சேலம் விபத்து : நாடாளுமன்ற நிதியில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் - சேலம் எம்.பி. பார்த்திபன்
x
சேலத்தில் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் பத்மநாபன் குடும்பத்தை நேரில் சந்தித்து சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆறுதல் கூறினார். கருங்கல்பட்டியில் நடந்த சிலிண்டர் விபத்தில் பத்மநாபன் எனும் தீயணைப்பு வீரர் உட்பட 5 பேர் உயிரிழந்த நிலையில்13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை சேலம் எம்.பி. பார்த்திபன் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து உயிரிழந்த தீயணைப்பு வீரரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு நாடாளுமன்ற நிதியில் இருந்து புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்