"பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்" - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வலியுறுத்தல்

கனமழை காரணமாக பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
x
கனமழை காரணமாக பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். தந்தி தொலைக்காட்சியில் வெளியான செய்தியை தொடர்ந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தேங்கி உள்ள மழை நீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளதாகவும், மின்சார பிரச்சினை உள்ளிட்டவை ஏற்பட்டால் பொதுமக்கள் அதை தாங்களாகவே சரிசெய்ய முயற்சிக்க வேண்டாம் என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்