தீபாவளியை முன்னிட்டு மது விற்பனை - ரூ.431 கோடிக்கு விற்கப்பட்டதாகத் தகவல்

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் மட்டும் 431 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு மது விற்பனை - ரூ.431 கோடிக்கு விற்கப்பட்டதாகத் தகவல்
x
கடந்த 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னையில் 79 கோடியே 84 லட்சத்திற்கும், மதுரையில், 98 கோடியே 89 லட்சத்திற்கும், சேலத்தில் 87 கோடியே 89 லட்சத்திற்கும் மது விற்பனையாகியுள்ளது. அதேபோல், திருச்சியில் 89 கோடியே 95 லட்சத்திற்கும், கோவையில், 74 கோடியே 46 லட்சத்திற்கும் என்று மொத்தம் 431 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு 467 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனையாகி இருந்தது. ஆக கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 2 நாட்களிலும் மொத்த மது விற்பனை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்