சிறப்பு டிஜிபி வழக்கு - 3 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கு 3 மாதங்களில் முடிக்க விழுப்புரம் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு டிஜிபி வழக்கு - 3 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்தவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் அளித்ததை தொடர்ந்து சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு எஸ்.பி.யாக இருந்தவர் என 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். புகார் குறித்துவிசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு  அமைக்கப்பட்டு, அந்த குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

மேலும் இதுகுறித்து சிபிசிஐடி போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது  சிறப்பு டிஜிபி-யாக இருந்தவர் அறிவுறுத்தலின்படியே தான் செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி வேல்முருகன் குறுக்கிட்டு, பெண் அதிகாரிகள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டுமெனவும், உயர் அதிகாரி கொலை செய்யச் சொன்னால் செய்வீர்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.

உயர் அதிகாரிகளே இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானால் காவல்துறை மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கும் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக எஸ்.பி. தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும், விழுப்புரம்  நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை 3 மாதத்தில் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்