சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு - சினிமா பாணியில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி

நாகையில், சாதி மறுப்பு திருமணம் செய்து, சார்-பதிவாளர் அலுவலகத்தில் கையெழுத்து போடும் போது, பெண்ணை, சினிமா பாணியில் பெற்றோர், காரில் கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு - சினிமா பாணியில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி
x
திருச்சி மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்த பாரதி என்பவர், நாகை மாவட்டம் செம்பியன்மாதேவி கிராமத்தை சேர்ந்த மதன்ராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். பெண் வீட்டாரின் எதிர்ப்பால் நாகை நீதிமன்ற வளாகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்ய வந்துள்ளனர். தாலி கட்டி திருமணம் முடிந்த நிலையில், கையெழுத்து போடும் போது, பதிவு அலுவலகத்தின் உள்ளே புகுந்த பெண்ணின் உறவினர்கள், அவரை நீதிமன்ற வளாகத்தில் இருந்து இழுத்து வந்து, காரில் ஏற்றினர். அப்போது பொதுமக்கள் காரை மறித்து போலீசார் உதவியுடன் பெண்ணை மீட்டனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்