"குறுவை நெல் கொள்முதல் பணிகள்" விரைவாக, சிறப்பாக முடிக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
குறுவை நெல் கொள்முதல் பணிகள் விரைவாக, சிறப்பாக முடிக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
x
குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில், குறுவை நெல் கொள்முதல் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், டெல்டா மாவட்டங்களுக்கான மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களிடம், தற்போதையை கொள்முதல் விவரங்கள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் தற்போது 843 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதால், டெல்டா மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நெல் கொள்முதல் பணிகளை உறுதி செய்யவும், மேற்பார்வையிடவும் அமைச்சர் சக்ரபாணிக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.



Next Story

மேலும் செய்திகள்