நடந்து சென்ற பெண்ணிடம் 5 சவரன் வழிப்பறி - பைக்கில் வந்த நபரின் சிசிடிவி காட்சி வெளியீடு

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்து சென்ற அஞ்சல்துறை பெண் ஊழியரிடம், மர்மநபர் ஒருவர் 5 சவரன் தங்க சங்கிலி பறித்து தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
நடந்து சென்ற பெண்ணிடம் 5 சவரன் வழிப்பறி - பைக்கில் வந்த நபரின் சிசிடிவி காட்சி வெளியீடு
x
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்து சென்ற அஞ்சல்துறை பெண் ஊழியரிடம், மர்மநபர் ஒருவர் 5 சவரன் தங்க சங்கிலி பறித்து தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. 50 வயது ரமாபாய், ஓடைப் பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே இரவு 9 மணியளவில் நடந்து சென்றுள்ளார். அப்போது, எதிரே பைக்கில் வந்த மர்மநபர், அவர் கழுத்தில் இருந்த 5 சவரன் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். தங்கச் சங்கிலியைப் பறிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்