"நடுக்கடலில் கத்தி வைத்து மிரட்டல்" - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

நடுக்கடலில் கழுத்தில் கத்தியை வைத்து தாக்கி, 4 லட்சம் ரூபாய் வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றதாக நாகை மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நடுக்கடலில் கத்தி வைத்து மிரட்டல் - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
x
நடுக்கடலில் கழுத்தில் கத்தியை வைத்து தாக்கி, 4 லட்சம் ரூபாய் வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றதாக நாகை மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே 12 நாட்டிக்கல் மைல் தொலைவில், கீச்சாங்குப்பம் மீனவர்கள் 2 பைபர் படகுகளில் மீன்பிடித்து உள்ளனர். அப்போது, அதிவேக படகுகளில் வந்து சுற்றி வளைத்த 9 பேர், மீனவர்களை கத்தி, சுளுக்கி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். கொலை செய்வதாக மிரட்டிய அவர்கள், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகள், ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி உள்ளிட்டவற்றை பறித்து சென்றதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்