12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி கடத்தல் - போக்சோவில் இளைஞர் கைது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். நெய்வேலியைச் சேர்ந்த சந்துரு என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. பின்னர், அந்த மாணவியை சந்துரு கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து புதுச்சந்திரம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சந்துருவை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
Next Story